FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை வெடித்துச் சிதறியது

பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை (அக்வேரியம்) வெடித்துச் சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Updated On : 17 டிசம்பர் 2022, 5:57 pm IST
கோப்புப்படம்
பகிர்:


பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை (அக்வேரியம்) வெடித்துச் சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த 52 அடி உயரமுள்ள உருளையான நீர்வாழ் காட்சிசாலையில் 1500க்கும் அதிகமான அதிசய மீன்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.

அந்நாட்டு நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், இது எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதால், அந்த அக்வேரியம் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒட்டுமொத்தமாக சேதமடைந்தது. இந்த கட்டடத்தில் ஏராளமான உணவகங்கள், பொழுதுபோக்கு அமைப்புகள், கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பாதிக்கப்பட்டன. அக்வேரியத்துக்குள் நிரப்பப்பட்டிருந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கட்டடத்திலிருந்து வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடியது. அதிலிருந்த 1500 மீன்களும் இறந்துவிட்டன. 

அதிர்ஷ்டவமாக இந்த அக்வேரியம் காலை 6 மணிக்கு வெடித்துச் சிதறியது. இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு வேளை ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெடித்திருந்தால் கூட, கட்டடம் மற்றும் சாலையில் மக்கள் கூட்டம் இருந்திருக்கும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கட்டப் பகுதியில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த விடுதிகளிலிருந்து 300 விருந்தினர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நீர்வாழ் காட்சிசாலைதான் உலகிலேயே, உருளையாக அமைக்கப்பட்டமிகப்பெரிய அக்வேரியமாக அறியப்பட்டு வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments