முகப்பு
உலகம்

வாகன விபத்தில் சிக்கிய அர்னால்டு...வெளியான அதிர்ச்சி செய்தி

இச்சம்பவம், வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றதாகவும் விபத்தில் சிக்கிய பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அர்னால்டின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Updated On : 23 ஜனவரி 2022, 2:16 pm IST
அர்னால்டு
பகிர்:

நடிகரும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். ஆனால், நல்வாய்ப்பாக எந்த வித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். 

இச்சம்பவம், வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றதாகவும் விபத்தில் சிக்கிய பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அர்னால்டின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், "அர்னால்ட் ஓட்டிக் கொண்டு சென்ற கார், ​​சன்செட் பவுல்வர்ட் மற்றும் அலென்ஃபோர்ட் அவென்யூ சந்திப்பில் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக இன்னும் இரண்டு கார்கள் மோதிக் கொண்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "தலையில் காயத்துடன் இருந்த பெண்ணை மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் சிக்கியவர்கள் போதைப்பொருள் அல்லது மது அருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், விசாரணை நடைபெற்றுவருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னால்டுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ள அவரின் செய்தித் தொடர்பாளர், விபத்தில் சிக்கிய பெண்ணை நினைத்துதான் அவர் கவலைப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே சிறிது நேரம் இருந்து, அவரின் உடல்நிலை குறித்து ஆராய்ந்த பின்னரே அர்னால்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையிடம் அவர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments