அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள்!
அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கனடாவின் யூகோனில் வான்வெளியில் பறந்த மர்ம பொருளை கனடா, அமெரிக்கா போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ உத்தரவின் பேரில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தனது சுட்டுரையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தொடர்புகொண்டு பேசினேன். தகவலளித்த வடஅமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பிற்கு நன்றி.
மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருளின் பாகங்களை சேகரித்து கனடா படைகள் ஆய்வு நடத்தும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவின் யூகோனில் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.