தாஹியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் சூழ்ந்த கரும்புகை AP
உலகம்

இலக்குகளை அடையும்வரை லெபனானில் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை இஸ்ரேலில் போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

DIN

இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று (நவ. 12) வான்வழித் தாக்குதல் நடத்தியது.

லெபனானின் தெற்கு புறநகர் பகுதிகளில் ஹிஸ்புல்லாக்களின் நடமாட்டமுள்ள 12 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சமூகவலைதளத்தில் அறிவித்திருந்தது.

அப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் எச்சரித்திருந்தது. மேலும் தாக்குதல் நடத்தவுள்ள இடங்களையும் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தது.

இதன்படி, அப்பகுதிகளிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்

இதனைத் தொடர்ந்து பெய்ரூட்டின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தெற்கு புறநகர் பகுதிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

கடந்த மாதம் லெபனானின் நபாட்டியா பகுதிகளில் உள்ள சந்தைப் பகுதிகளில், நகராட்சி பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் மேயர் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து லெபனானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வாரம் கழித்து தரை வழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்தது.

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படிக்க | அதிபர் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலக்கு..! புதிய சலுகையை அறிவித்த கப்பல் நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொகுசு கார் விபத்து: தொழிலதிபர் மகன் கைது!

கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்!

பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்

டிஜிட்டல் மயமாகும் சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி!

சம்மதம் இல்லாமல் கருப்பை அகற்றம்! பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்!

SCROLL FOR NEXT