உக்ரைனில் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!
உக்ரைனில் வான்வழி தாக்குதலுக்கு ரஷியா ஆயத்தம்: ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடல்!
கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ரஷிய படைகள் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா கீவ் நகரிலுள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த ரஷியா ஆயத்தம்?
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் தூதரகங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இஸ்ரேல் தூதரகம் கீவ் நகரில் செயல்படுவதாக அந்நாட்டு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.