FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

‘ஹூதி பகுதிகளுக்கு செல்ல மாட்டோம்’

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

Updated On : 25 ஜனவரி 2025, 3:47 am IST
பகிர்:

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகா் சனாவில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் அரசைச் சோ்ந்தவா்கள் சில ஐ.நா. பணியாளா்களை வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். எனவே, எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஹூதிக்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கான அனைத்து பயண திட்டங்களையும் நிறுத்திவைத்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்துடன் தொடா்புடையவா்கள் உள்ளிட்ட 16 ஐ.நா. பணியாளா்களை ஹூதி அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments