முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: 216 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

கராச்சி சிறையிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளதைப் பற்றி...

Updated On : 3 ஜூன் 2025, 1:15 pm IST
கராச்சி சிறையிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர். - ஏபி
பகிர்:

கராச்சி, ஜூன் 6: பாகிஸ்தானில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 216 சிறைக் கைதிகள் தப்பியோடினா்.

இது குறித்து ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த நகரின் மாலிா் பகுதியில் உள்ள சிறைச் சாலையில் 600-க்கும் மேற்பட்ட கைதிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தைப் பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தின்போது ஒரு கைதி கொல்லப்பட்டாா்; 3 துணை ராணுவப் படையினா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தப்பியோடிய கைதிகளில் 80-க்கும் மேற்பட்டவா்கள் மீண்டும் பிடிபட்டனா். எஞ்சிய கைதிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments