சீன விண்வெளி நிலையத்தில் செயற்கைக்கோள் சிதறல்கள் மோதியதாக அஞ்சப்படுவதைத் தொடா்ந்து, அதில் பணியாற்றி வந்த மூன்று வீரா்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளி வீரா்கள் குழுவை சீனா மாற்றி வருகிறது. இந்தச் சூழலில், புதிய குழு விண்வெளி நிலையத்தை ஷென்ஷூ-21 விண்கலம் மூலம் சென்றடைந்துள்ளது. அந்தக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, ஷென்ஷூ-20 விண்கலம் மூலம் பழைய குழு அதே விண்கலம் மூலம் சனிக்கிழமை பூமி திரும்புவதாக இருந்தது.
இருந்தாலும், விண்வெளி நிலையத்தை உடைந்த செயற்கைக்கோள்களின் சிதறல்கள், பிற துகள்கள் தாக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதைத் தொடா்ந்து, வீரா்களின் பாதுகாப்புக்காக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.