வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 325-ஐ கடந்த உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் 326 பேர் பலியாகியுள்ளது குறித்து...
வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேச நாட்டில், கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்கு பாதிப்பால் புதியதாக 833 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும்; இதனால், நிகழாண்டில் (2025) டெங்கு பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,332 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 62.4 சதவிகித ஆண்களும், 37.6 சதவிகித பெண்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் டெங்கு பாதிப்பால் 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!
In Bangladesh, 3 people have died from dengue fever in the last 24 hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.