இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய (கோப்புப் படம்) படம் - இன்ஸ்டா
உலகம்

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை இந்தியா வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, மூன்று நாள்கள் அரசு முறைப் பயணமாக நாளை (அக். 15) இந்தியா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பின்பு, பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளை முதல் முறையாக, இந்தியா வருகின்றார். வரும் அக்.18 ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில், அவர் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திப்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் கல்வித் துறை அமைச்சரகாவும் பதவி வகிக்கும் பிரதமர் அமரசூரிய, தில்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், என்டிடிவியின் உலக மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அமரசூரிய, அவர் படித்த தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு நேரில் செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு; இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் நிதீஷ்குமார்!

Sri Lankan Prime Minister Amarasinghe will arrive in India tomorrow (Oct. 15) on a three-day official visit, it has been reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா: நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

பிஎஸ்என்எல் தீபாவளிப் பரிசு! ஒரு ரூபாய்க்கு சிம் - தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

மீண்டும் பாரிஸுக்குப் போகலாம்... அனன்யா பாண்டே!

வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தீபாவளிப் பரிசு... பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT