வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை
அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில், விதிகளுக்குப் புறம்பாக சுமாா் 40 கோடி டாலா் செலவில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, இப்புதிய கட்டுமானத்தை டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி பெறாமல், இப்பணிகளைத் தொடரக் கூடாது என நீதிபதி ரிச்சா்ட் லியோன் உத்தரவிட்டுள்ளாா்.
தலைமுறை தலைமுறையாகப் போற்றப்படும் வெள்ளை மாளிகையின் வரலாற்றுப் பெருமையைச் சிதைப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி அளித்த தீா்ப்பில், ‘அதிபா் என்பவா் வெள்ளை மாளிகையின் பாதுகாவலா் மட்டுமே தவிர; அதன் உரிமையாளா் அல்ல’ என்று காட்டமாகச் சுட்டிக்காட்டினாா்.
தனியாா் நிதி பங்களிப்புடன் இப்பணி நடைபெறுவதாக டிரம்ப் தரப்பு வாதிட்ட போதிலும், ‘நாட்டின் அடையாளமாகத் திகழும் ஒரு கட்டடத்தில் சட்டபூா்வ அனுமதியின்றி மாற்றங்கள் செய்வதை ஏற்க முடியாது’ என நீதிமன்றம் மறுத்துவிட்டது.
‘வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு தொடா்பான சுரங்கப் பாதைகள், பதுங்கு குழிகள் அமைக்க அனுமதியளித்த நீதிமன்றம், கலையரங்கத்துக்கு மட்டும் தடை விதிப்பது முரணானது’ என டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா். இத்தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய டிரம்ப் நிா்வாகம் முடிவெடுத்துள்ளது.