லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!
லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் ட்ரோன் தாக்குதலில் கொலை
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரக்ஸாய் மாவட்டத்தில் திரா பள்ளத்தாக்குப் பகுதிகளில் லஷ்கர்-இ-இஸ்லாம் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக வந்த உளவு தகவலையடுத்து, அங்கு ஆளில்லா சிறியரக விமானமான ட்ரோன் உதவியுடன் தாக்குதல்களை ராணுவம் நடத்தியதில் அங்கு பதுங்கியிருந்த 10 பேரில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இருவர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அகா கேல் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Security forces on Monday killed three terrorists in a drone strike in northwest Pakistan, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.