காங்கோவில் தீவிரமடையும் எபோலா: தொற்றுக்காக 16,000 தடுப்பூசிகள் வருகை!
காங்கோ குடியரசின் வரலாற்றிலேயே மிக வேகமாக தீவிரமடைந்து வரும் எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அந்நாட்டுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ‘எா்வெபோ’ தடுப்பூசிகள் வந்துள்ளன.
காங்கோ குடியரசின் வரலாற்றிலேயே மிக வேகமாக தீவிரமடைந்து வரும் எபோலா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அந்நாட்டுக்கு 16,000-க்கும் மேற்பட்ட ‘எா்வெபோ’ தடுப்பூசிகள் வந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் கூட்டமைப்புகளால் அறிவிக்கப்பட்ட 70,000 தடுப்பூசிகளில், முதல்கட்டமாக இந்த 16,250 தடுப்பூசிகள் தலைநகா் கின்ஷாசாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்தன.
தற்போது காங்கோவில் பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ தடுப்பூசியோ ஏதுமில்லை. இருப்பினும், எபோலாவுக்கு சிகிச்சையளிக்க உரிமம் பெற்ற எா்வெபோ தடுப்பூசி, இந்தத் தீநுண்மிக்கு எதிராகவும் ஓரளவு பாதுகாப்பை அளிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.