FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வெனிசுவேலாவின் 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவின் 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது பற்றி...

38 வினாடிகள் முன்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்
பகிர்:

வெனிசுவேலாவின் 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, அமெரிக்கா - வெனிசுவேலா இடையே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement

Advertisement

என்னுடைய வழிகாட்டுதலின் படி, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி, நமது எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும்.

இதனால், வருங்காலத்தில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எரிபொருள் விலைகளைக் கணிசமாகக் குறைப்பதோடு, வெனிசுவேலா நாட்டை செழிப்பான பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

இந்த ஒப்பந்தமானது வெனிசுவேலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பை மேலும் வலுப்படுத்துகிறது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உலகளவில் 17 சதவிகித கச்சா எண்ணெய் இருப்பை வெனிசுவேலா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

President Donald Trump has announced that the United States has entered into an agreement with Venezuela to take control of the country's oil reserves, estimated at 65 billion barrels.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments