அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் பலி
அரிசோனாவின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
அரிசோனாவின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் அரிசோனா மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தனியார் ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர். பீனிக்ஸ் நகருக்கு கிழக்கே சுமார் 103 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெலிகிராஃப் பள்ளத்தாக்கு அருகே காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் மலைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பொழுதுபோக்கு ஸ்லாக் லைனில்(கயிறு அல்லது பட்டை) மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. விபத்துக்குள்ளான பகுதியை அடைய மீட்புக்குழுவினருக்கு நீண்ட நேரமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பள்ளத்தாக்கிலிருந்து மேற்கே 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் க்ரீக் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
A private helicopter crashed Friday in a mountainous area of Arizona, killing all four people aboard, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.