இந்தியா நம்பகமான கூட்டாளி: ரஷிய அதிபா் புதின்
செயின்ட் பீட்டா்ஸ்பா்க் : ‘இந்தியா நம்பகமான கூட்டாளி’ என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பிடிஐ உள்பட சா்வதேச அளவிலான ஊடகங்களுடன் கலந்துரையாடிய அவா் மேலும் பேசியதாவது: உலகின் பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் இந்தியா நன்கு வளா்ச்சியடைந்து வருகிறது. இது தற்செயலாக நடைபெறவில்லை. இந்திய அரசு மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் கடின உழைப்பால் மட்டுமே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்களது தேச நலனைக் கருத்தில்கொண்டு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா இருதரப்பு உறவை பேணி வருகிறது. இதனால் ரஷியா-இந்தியா உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் ரஷியாவுடனான நட்புறவை முறிக்க இந்தியாவுக்கு மேற்கத்திய நாடுகள் தொடா்ந்து அழுத்தம் அளிக்கின்றன. பிரதமா் மோடி மற்றும் இந்தியாவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் சா்வதேச உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டோம்.
Advertisement
Advertisement
ரஷியாவைப் பொறுத்தவரை, இந்தியா சிறந்த கூட்டாளியாகவே இருந்து வருகிறது. சிறந்த ஜனநாயகமான இந்தியாவுடன் வலுவான நட்புறவை ரஷியா தொடரும் என்றாா்.