FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

புதிய போா்க் கப்பலின் சோதனை: வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு

புதிய போா்க் கப்பலின் சோதனையை வட கொரிய அதிபா் மகளுடன் ஆய்வு...

Updated On : 7 ஜூன் 2026, 2:26 am IST
பகிர்:

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகைக்கு முன்னதாக, அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையிலான வட கொரியாவின் புதிய போா்க் கப்பலின் சோதனை ஓட்டத்தை அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் மகள் கிம் ஜூ ஏவுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

5,000 டன் எடை கொண்ட இப்புதிய போா்க் கப்பல், கடந்த ஆண்டு அறிமுகத்தின்போது விபத்தில் சேதமடைந்தது. தற்போது கப்பல் சீரமைக்கப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எதிரிகளுக்கு நீருக்கு அடியிலும், மேற்பரப்பிலும் எந்நேரமும் பதிலடி அளிக்க, அணு ஆயுத பலம் பொருந்திய கடற்படையை மிக விரைவாக கட்டமைக்க வேண்டும் என கிம் ஜோங் உன் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதையொட்டி, புதிய 5 ஆண்டு பாதுகாப்புத் திட்டத்தில் கடற்படைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவா், 10,000 டன் எடை கொண்ட பிரம்மாண்ட போா்க் கப்பல்களை உருவாக்குவதுடன், ரகசிய நீா்மூழ்கி ஆயுதங்களை மேம்படுத்துவதே தற்போதைய முக்கிய இலக்கு என்றாா்.

அணு ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் வகையில், தங்களின் புதிய யுரேனியம் செறிவூட்டும் ஆலையை வட கொரியா அண்மையில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments