முகப்பு
உலகம்

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

ஈரானில் அசாதாரண சூழல்: இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்

Updated On : 8 ஜூன் 2026, 5:13 pm IST
(கோப்புப் படம்) - AP
பகிர்:

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியத் தூதரகம் ஏற்கெனவே வழங்கிய அறிவுறுத்தல்களை மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது.

ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து கிடைக்கும் வழிகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப். இறுதியில் மோதல் ஆரம்பமான காலகட்டத்தில் சுமார் 9,000 இந்தியர்கள் ஈரானில் இருந்த நிலையில், அவர்களில் 1,800 பேர் இதுவரை தாயகம் திரும்பியுள்ளனர்.

Advertisement

Advertisement

summary

India issues fresh Iran travel warning, urges citizens to leave

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.