முகப்பு
உலகம்

போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது! உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியா

உக்ரைனுக்கு இனி ஒரு ஆயுதம்கூட அனுப்பப்படாது: பல்கேரியா திட்டவட்டம்!

Updated On : 9 ஜூன் 2026, 8:08 pm IST
ரஷியாவுக்கு எதிரான சண்டையில் பலியான உக்ரேனிய வீரரின் உடல் சுமந்து செல்லப்படும் காட்சி - AP
பகிர்:

உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக பல்கேரியாவில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமிதார் ஸ்டோயானோவ் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது : “உக்ரைனில் நீடிக்கும் போரைப் போர்க்களத்தில் தீர்க்க முடியாதென்பதை நாங்கள் ஏற்கெனவே தெளிவாகத் உரைத்துவிட்டோம். நாம் கண்முனே கண்டுகொண்டிருப்பது ஆக்கிரமிப்புக்கானதொரு போர்; எவ்வளவு ஆயுதம் குவிக்கப்பட்டாலும் அதன் முடிவில் மனித உயிர்களின் இழப்பே நேரிடும்.

ஆகவே, உக்ரைனுக்கு அதிக மக்களே தேவை; அதைவிடுத்து அதிக ஆயுதங்கள் தேவையில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு போதுமான அளவு ஆயுதங்கள் உள்ளன. ஆகவே, நாங்கள் உக்ரேனிய ராணுவத்துக்கு அதிக ஆயுதங்கள் வழங்குவதை ஊக்குவிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமான பல்கேரியா, உக்ரைன் மீது கடந்த 2022-இல் ரஷியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. இந்த நிலையில், பல்கேரியாவில் பிரதமர் ரூமென் ராதேவ் தலைமையிலான புதிய அரசு கடந்த ஏப்ரலில் ஆட்சியமைத்தது. உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள புதிய பல்கேரிய அரசின் முடிவு, ரஷியாவின் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு எதிர்வினையாற்றி வரும் உக்ரைனுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

summary

Bulgaria's new government to stop supplying weapons to Ukraine

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.