போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது! உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியா
உக்ரைனுக்கு இனி ஒரு ஆயுதம்கூட அனுப்பப்படாது: பல்கேரியா திட்டவட்டம்!
உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக பல்கேரியாவில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, பல்கேரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் டிமிதார் ஸ்டோயானோவ் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது : “உக்ரைனில் நீடிக்கும் போரைப் போர்க்களத்தில் தீர்க்க முடியாதென்பதை நாங்கள் ஏற்கெனவே தெளிவாகத் உரைத்துவிட்டோம். நாம் கண்முனே கண்டுகொண்டிருப்பது ஆக்கிரமிப்புக்கானதொரு போர்; எவ்வளவு ஆயுதம் குவிக்கப்பட்டாலும் அதன் முடிவில் மனித உயிர்களின் இழப்பே நேரிடும்.
ஆகவே, உக்ரைனுக்கு அதிக மக்களே தேவை; அதைவிடுத்து அதிக ஆயுதங்கள் தேவையில்லை. உக்ரைன் ராணுவத்துக்கு போதுமான அளவு ஆயுதங்கள் உள்ளன. ஆகவே, நாங்கள் உக்ரேனிய ராணுவத்துக்கு அதிக ஆயுதங்கள் வழங்குவதை ஊக்குவிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமான பல்கேரியா, உக்ரைன் மீது கடந்த 2022-இல் ரஷியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. இந்த நிலையில், பல்கேரியாவில் பிரதமர் ரூமென் ராதேவ் தலைமையிலான புதிய அரசு கடந்த ஏப்ரலில் ஆட்சியமைத்தது. உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ள புதிய பல்கேரிய அரசின் முடிவு, ரஷியாவின் தாக்குதல்களைத் தாங்கிக்கொண்டு எதிர்வினையாற்றி வரும் உக்ரைனுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
Bulgaria's new government to stop supplying weapons to Ukraine
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.