ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்க துணை அதிபர்!
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஸ்விட்சர்லாந்து சென்றது பற்றி...
ஈரானுடனான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) ஸ்விட்சர்லாந்து சென்றடைந்தார்.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர், ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்பட்டதையடுத்து, அமெரிக்காவும் - ஈரானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது வியாழக்கிழமை (ஜூன் 18) இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதன் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதாக ஈரான் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் ஸ்விட்சர்லாந்து சென்றடைந்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தொழில்நுட்ப விவரங்களை ஆராய்ந்து தீர்வு காண்பது, லெபனான் போர்நிறுத்த விவகாரம் குறித்து முக்கிய முவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.