FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிடைக்காத உடல்கள்! நேபாளத்தில் உருவபொம்மைக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு!

நேபாளத்தில் உருவபொம்மைக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு நடத்துவது பற்றி...

2 செப்டம்பர் 2026, 3:49 pm IST
நேபாளத்தில் உருவபொம்மை, வைகோலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்கு - x
பகிர்:

நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பத்தினரின் உடல்கள் கிடைக்காததால், வைக்கோலால் செய்யப்பட்ட உருவங்களுக்கு உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்து வருகின்றனர்.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

உலகையே உலுக்கிய இந்த பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 1,100-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3,800 பேரைத் தேடும் பணி எட்டாவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

Advertisement

Advertisement

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் தரையிலிருந்து பல அடி உயரத்துக்கு இடிபாடுகளாலும், சேறு, சகதிகளாலும் குவிந்திருப்பதால் உடல்களை மீட்பதில் நேபாள ராணுவத்தினர் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளத்தில் காணாமல் போனவர்கள் குறித்து 8 நாள்களாகியும் எந்தவொரு தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயிலில் காணமல் போனவர்களின் உறவினர்கள் வைக்கோலால் செய்யப்பட்ட உருவங்களைப் பயன்படுத்தி இறுதிச் சடங்கு மேற்கொண்டனர்.

மேலும், உருவபொம்மைகளுக்கும், திரிசூலி ஆற்றின் கரைகளில் பிண்டம் வைத்து இறுதிச் சடங்குகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

- AP

மறுபுறம், இமயமலை பௌத்த மதத்தினரின் சடங்குகளின்படி, காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்துப் பிரார்த்தனைகள் மேற்கொண்டு இறுதிச் சடங்கு செய்து வருகின்றனர்.

இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளின், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள், காண்போரைக் கலங்க வைக்கிறது.

summary

Bodies not recovered! Family performs last rites for an effigy in Nepal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments