FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வு!

ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

4 செப்டம்பர் 2026, 6:12 pm IST
டீசல் விலை உயர்வு
பகிர்:

ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான 6 மாதகாலப் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது டீசல் ஒரு கேலனுக்கு $5.85 (இந்திய மதிப்பில் ரூ. 552.42) என்ற அளவில் விற்பனையாகிறது. இது அங்கு இதுவரை இல்லாத அளவைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

(ஒரு கேலன் என்பது 3.785 லி கொள்ளளவு)

சரக்கு மற்றும் விநியோகம் சார்ந்த சேவைகள் பெருமளவு டீசலைச் சார்ந்தே இருப்பதால், டீசல் விலை உயர்வு அன்றாட பயன்பாட்டுப் பொருள்களின் போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்கும். இதனால், பல்வேறு துறை சார்ந்த வணிகங்களின் செலவுகளும் அதிகரித்துள்ளன.

மேலும், அமெரிக்காவில் இந்த விலை உயர்வால் அரசியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களில் வாக்காளர்களின் கவனம் பொருளாதார விவகாரங்களைப் பொருத்தே அமைய வாய்ப்புள்ளது.

டீசலைப் போன்றே பெட்ரோலின் விலையும் அங்கு உயர்ந்து வருகின்றது. ஆனால், டீசலுடன் ஒப்பிடுகையில் பெட்ரோல் விலையேற்ற வேகம் குறைவே. அமெரிக்காவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை $3.20 ஆக இருந்த நிலையில், தற்போது அது $4.15 ஆக உயர்ந்துள்ளது.

சமீப நாள்களில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

summary

Diesel prices in the US hit an all-time high due to the Iran conflict!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments