நூதன முறையில் பணம் பறிப்பு
பெங்களூர், அக்.8: பெங்களூர், மல்லேஸ்வரம், 13-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (65). ஹரிஹர் நகரில் இருந்து ரயில் மூலம் யஷ்வந்தபுரம் வந்த அவர் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு, ஷெல் பெ
பெங்களூர், அக்.8: பெங்களூர், மல்லேஸ்வரம், 13-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (65). ஹரிஹர் நகரில் இருந்து ரயில் மூலம் யஷ்வந்தபுரம் வந்த அவர் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு, ஷெல் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாராம். அப்போது அங்கு காரில் வந்த இருவர், மல்லேஸ்வரம் செல்வதாகக் கூறி சந்திரசேகரை காரில் ஏற்றிச் சென்றார்களாம். பின்னர் அவரைத் தாக்கிய அக்கும்பல், அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்பேசியைப் பறித்துக் கொண்டு காரில் இருந்து அவரை வெளியே தள்ளிவிட்டு தப்பி விட்டனராம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.