வங்கி ஊழியர் கொலை: தனியார் காவலர் மீது வழக்கு
பெங்களூர், குமாரகுருபா சாலையில் உள்ள அபார்ட்மென்டில் வசித்த வங்கி ஊழியர் அனுசுயா என்பவர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கான காரணம் குறித்து பெங்களூரில் சனிக்கிழமை நகர கூடுதல் காவல் ஆணையர
பெங்களூர், குமாரகுருபா சாலையில் உள்ள அபார்ட்மென்டில் வசித்த வங்கி ஊழியர் அனுசுயா என்பவர் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
இக்கொலைக்கான காரணம் குறித்து பெங்களூரில் சனிக்கிழமை நகர கூடுதல் காவல் ஆணையர் சுனில்குமார் கூறியது: போலோ கார்டன் அபார்ட்மென்டில் கடந்த ஓராண்டாக வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப். இவர் கொலை செய்யப்பட்ட அனுசுயாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அபார்ட்மென்ட்டின் குடியிருப்போர் நலச் சங்கத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுசுயா கொலை செய்யப்பட்டிருக்கிறார். தன் மீது அனுசுயா புகார் அளித்ததால் அஷ்ரப் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.