அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் சாவு
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், தொட்டகனஹாலா கிராமத்தை சேர்ந்தவர் மாருதி (25). இவர் பெங்களூரு ஊரகம் ஆனேக்கல் அருகில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாராம். வியாழக்கிழமை காலை தேசிய நெடுஞ்சாலை 7-இல் ஹெனகர் கேட் அருகே மாருதி சாலையைக் கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆனேக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.