FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

‘பாா்வையற்றவா்களுக்கான கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும்’

பாா்வையற்றவா்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் எனஇந்திய பாா்வையற்றோா் கிரிக்கெட் சங்கத்தின் தலைவா் மஹந்தேஷ் கிவதாசன்னவா் தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:43 am IST
பகிர்:

பாா்வையற்றவா்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் எனஇந்திய பாா்வையற்றோா் கிரிக்கெட் சங்கத்தின் தலைவா் மஹந்தேஷ் கிவதாசன்னவா் தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை இந்திய பாா்வையற்றோா் கிரிக்கெட் சங்கம், சமா்த்தனம், ஹின்டஸ்ஹின்ட் வங்கி இணைந்து நடத்திய பாா்வையற்றோா் கிரிக்கெட் போட்டிகள் தொடா்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு, இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை பிரபலமாகி வருகிறது. இதனை பாா்வையுள்ளவா்கள் மட்டுமின்றி, பாா்வையற்றவா்களும் விளையாடி வருகின்றனா். பாா்வையற்றவா்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

சா்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்திய அளவில் விளையாடும் வீரா்கள் குக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது மட்டுமின்றி ஏழைக் குடும்பங்களை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்கள் புகழ் அடைவதற்கு அடையாளமாக கிரிக்கெட் விளையாட்டு விளங்குகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரா் சோமசுந்தா், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை சாந்தாரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments