FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சுந்தர சண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா

புதுச்சேரி, நவ.11:  புதுச்சேரியின் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சுந்தரசண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   பேராசிரியர் சுந்தரசண்முகனார் புதுச்சேரியில் வாழ்ந்து மற

Updated On : 20 செப்டம்பர் 2012, 8:43 pm IST
பகிர்:

புதுச்சேரி, நவ.11:  புதுச்சேரியின் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சுந்தரசண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  பேராசிரியர் சுந்தரசண்முகனார் புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர். 70 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். அவருடைய 6 நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  அவரைப் பற்றிய குறுந்தகடு பேராசிரியர் சுந்தரசண்முகனார் அறக்கட்டளையினரால் பேராசிரியரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

  இந்த குறுந்தகட்டினை முன்னாள் புதுச்சேரி சட்டத்துறைச் செயலர் வயி.நாராயணசாமி வெளியிட்டார். அறக்கட்டளை துணைத் தலைவர் புலவர் வி.திருவேங்கடம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரெஞ்சுப் பேராசிரியர் க.சச்சிதானந்தம், அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் சு.ச.சரவணன், செயலர் சு.வேல்முருகன், குறுந்தகட்டினை உருவாக்கிய செ.இலக்குவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments