கடத்தல் கூழாங்கற்கள் பறிமுதல்
சிதம்பரம், அக். 8: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திருவாரூருக்கு கூழாங்கற்கள் கடத்திய லாரியை சிதம்பரம் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். விருத்தாசலம் அருகே உள்ள வாழாக்கொல்லை கிராமத்திலிருந்து க
சிதம்பரம், அக். 8: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திருவாரூருக்கு கூழாங்கற்கள் கடத்திய லாரியை சிதம்பரம் வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
விருத்தாசலம் அருகே உள்ள வாழாக்கொல்லை கிராமத்திலிருந்து கூழாங்கற்கள் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் வழியாக லாரி ஒன்று திருவாரூர் புறப்பட்டது.
சிதம்பரம் அருகே மணலூர் சிலுவைபுரத்தில் வட்டாட்சியர் ஜே.ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பிரமம்நாயகம் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது லாரியில் கூழாங்கற்கள் கடத்தி வருவது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த ராஜேந்திரன், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.