FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மதுராந்தகம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி

மதுராந்தகம், அக். 8: மதுராந்தகம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சியில் உள்ள 24 உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 113 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு கு. மலர்விழி (திமுக

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

மதுராந்தகம், அக். 8: மதுராந்தகம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சியில் உள்ள 24 உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 113 பேர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு கு. மலர்விழி (திமுக), வி. ரவி (அதிமுக), ந. ராசா (பாமக), அ.விஜியகுமார் (தேமுதிக), ஞா. ராஜாமணி (பகுஜன் சமாஜ் கட்சி) ஜெய்சந்தி ஜெயின் (காங்கிரஸ்) ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர். நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 113 பேர் போட்டியிடுகின்றனர்.

 அச்சிறுபாக்கம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு உ. தாவீத்பீ (திமுக), லீலாவதி அகோரம்(அதிமுக), சு. இந்திராணி (பாமக), சீ. ஜெயந்தி (தேமுதிக), ஜெகலட்சுமிமணிவண்ணன்(காங்கிரஸ்) ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர். மேலும்,15 வார்டுக்கு மொத்தம் 60 பேர் போட்டியிடுகின்றனர்.

 கருங்குழி பேரூராட்சி தலைவர் பதவிக்கு கலைவாணி (காங்கிரஸ்), குணசுந்திரி விஸ்வநதன்(திமுக), மஞ்சுளா (அதிமுக), நித்தியகலா (விடுதலை சிறுத்தை கட்சி), நா. வித்யா (தேமுதிக), ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர். 15 வார்டுக்கு 62 பேர் போட்டியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

 இடைக்கழிநாடு பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஆதிகேசவலு (திமுக), பாலசுப்பிரமணியன்(அதிமுக), மனோகரன் (மதிமுக), ரமேஷ் (பாமக), விஜியலட்சுமி (காங்கிரஸ்), ஜெயராஜ்(தேமுதிக), ரவி (இந்திய கம்யூனிஸ்ட்), அங்கமுத்து (சுயே), கருணாகரன் (சுயே), மாணிக்பாஷா (சுயே), மாரிமுத்து (சுயே), ஸ்ரீதர் (சுயே), ஞானவேல் (சுயே), ஆகிய 13 பேர் போட்டியிடுகின்றனர். இந்த பேரூராட்சியின் 21 வார்டுக்கு உறுப்பினர் பதவிக்கு 116 பேர் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவல்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments