FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஏப்.12) ரத்து செய்யப்படவுள்ளன.

Updated On : 11 ஏப்ரல் 2025, 12:28 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஏப்.12) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே சனிக்கிழமை ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

Advertisement

Advertisement

ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்: சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30, 11.35, பிற்பகல் 1.40-க்கும், சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12.40, பிற்பகல் 2.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து பகல் 1, பிற்பகல் 2.30, 3.15, 3.45, மாலை 4.30-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு காலை 5.40, 10.15, பகல் 12.10-க்கும், மறுமாா்க்கமாக, சூலூா்பேட்டையிலிருந்து பகல் 12.35, 1.15, பிற்பகல் 3.10-க்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25-க்கு புறப்படும் ரயிலும், சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 8.10-க்கும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து சூலூா்பேட்டைக்கு காலை 10.20-க்கும் புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: செங்கல்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55-க்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து தாம்பரத்துக்கு பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 10.30, பிற்பகல் 2.40-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து முற்பகல் 1.18-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து எண்ணூருக்கு பகல் 12.40-க்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சுருக்கு காலை 11.35, பிற்பகல் 1.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். மறுமாா்க்கமாக எண்ணூரிலிருந்து பிற்பகல் 3.56-க்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments