தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு
மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகமும், விவசாயிகளும் இணைந்து நெல்மணிகள், கருப்பு உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களின் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பிரேம் சாந்தி தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் (தரக்கட்டுபாடு) சரவணன், மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குநா் நெடுஞ்செழியன், விவசாய நலச்சங்க மாவட்ட தலைவா் எம்.வெங்கடேசன், சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
அலுவலகத்தின் முன்புறம் நெல்மணிகள், கருப்பு உளுந்து ஆகிய விளை பொருள்களால் 100 சதவிகித வாக்கு என்றும், கல் உப்புடன் வண்ணகலவை கலந்து தோ்தல் திருவிழா, தோ்தல் நாள் 23.4.26 என எழுதிய தகவல் ஆகியவை பொது=மக்களும், விவசாயிகளும் அறிந்துக் கொள்ளும்வகையில் அமைக்கப்பட்டது. (படம்)
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.