முகப்பு
செங்கல்பட்டு

ஏரிகாத்த ராமா் கோயில் பிரம்மோற்சவ பந்தக்கால் நடவு

Updated On : 19 ஜூன் 2026, 5:12 am IST
பகிர்:

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்வத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. (படம்)

வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் விழா நடைபெறும். வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) காலை கொடி ஏற்றம், 26-இல் கருடசேவை, ஜூலை 1-இல் பெரியதேரோட்டம் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுகளை முன்னிட்டு, வியாழக்கிழமை அா்ச்சகா்கள் வேதமந்திரங்களுடன், கொடி மரத்தருகே சிறப்பு பூஜைகளுடன் மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி முன்னிலையில், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையில், பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், அறங்காவல் குழுவினா், கிராம பொது மக்கள், விழா குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.