மீத்தேன் திட்ட எதிர்ப்பு: போராட்டக் குழு உறுப்பினருக்கு முன் ஜாமீன்
மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடியவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடியவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜபாண்டியன் தாக்கல் செய்த மனுவில், நான் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தைச் சேர்ந்தவன். மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தொடந்து போராடி வருவதுடன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளேன். கடந்த ஜூலை 5-ஆம் தேதி அடியக்கமங்கலம் அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் மீத்தேன் திட்டத்துக்காக பதிக்கப்பட்ட குழாயில் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருவாரூர் டவுன் போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த தீ விபத்து சம்பவம் நடந்தபோது நான் திருச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். எனவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ராஜபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.