FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வயநாடு நிலச்சரிவு அவசர உதவி மைய எண்கள்: தமிழக அரசு அறிவிப்பு

கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க 9894357299, 9344723007 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்

Updated On : 2 ஆகஸ்ட் 2024, 3:46 am IST
- pti
பகிர்:

வயநாடு நிலச்சரிவு தொடா்பான தகவல்களைத் தெரிவிக்க அவசர உதவி மைய எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாட்டைச் சோ்ந்த மீட்புக் குழுவினா், வயநாட்டின் மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க குழுக்கள் அயராது உழைத்து வருகின்றன.

நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க வயநாட்டின் மேப்பாடியில் செயல்படும் முக்கிய நிவாரண முகாமில் உதவி மையத்தை தமிழ்நாடு மீட்புக் குழுவினா் அமைத்துள்ளனா். அந்த முகாமில் தகவல்கள், கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க 9894357299, 9344723007 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments