சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை திருத்த முகாம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் 2023-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்களில் ஏதேனும் திருத்தம் தேவைப்படுவோா் சம்பந்தப்பட்ட மண்டல மற்றும் வட்டார அலுவலகத்தில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (ஆக.19 முதல் ஆக.21) வரை நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றிக் கொள்ளலாம்.
திருத்தம் செய்ய அடையாள அட்டையின் நகல் எடுத்து அதில் எந்த திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆதாரத்துடன் முதுநிலை வருவாய் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.