ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து. 
சென்னை

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

திருமங்கலம் அருகே ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால், அங்கிருந்த தளவாடப் பொருள்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் 6 வண்டிகளில் வந்து தீயணைப்புப் படையினர், சுமார் 2.30 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீவிபத்து காரணமாக, ஜன்னல் வழியாக கரும்புகைகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள உணவகத்தில், மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிருந்த தளவாடப் பொருள்கள், முக்கிய ஆவணங்கள், மின்னணு உபகரணங்கள் எரிந்து சேதமாகின. தீவிபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Fire breaks out at GST Commissionerate office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

இந்தியத் தயாரிப்பு பொருள்களுக்கு உயா் தரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

SCROLL FOR NEXT