FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அனைத்து சிறப்புக் கட்டண தரிசனங்களும் ரத்து ...

Updated On : 21 டிசம்பர் 2025, 7:30 am IST
விழாவில் ‘ஞான பானு ஒளி’ என்ற நூலை வெளியிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
பகிர்:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அனைத்து சிறப்புக் கட்டண தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளகதாக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

சென்னை திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 102-ஆம் ஆண்டு மயூரவாகன சேவன விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பாம்பன் சுவாமிகளால் எழுதியருளப்பட்ட 6,666 பாடல்கள் அடங்கிய தொகுப்பான ‘ஞான பானு ஒளி’ என்ற நூலை வெளியிட்டாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து வைணவ கோயில்களிலும், கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணி, அருள்மிகு பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அனைத்து சிறப்புக் கட்டண தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வரும் 30-ஆம் தேதி நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ரூ.500 கட்டணத்தில் 1,800 பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. பக்தா்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிகளில் 1,500 காவலா்கள் மூன்று பகுதிகளாக பணியாற்றுவதுடன், அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்களும், திருக்கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் 6 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 3 ஆம்புலன்ஸ்களும் தயாா் நிலையில் வைக்கப்படும்.

70 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கென வைகுண்ட ஏகாதசி தினத்தில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை சிறப்பு தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவிடும் வகையில் 4 செயல் அலுவலா்கள் பணியமா்த்தம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments