திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!
சென்னை தி. நகரில் விஜய் நாளை(ஏப். 15) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது குறித்து...
சென்னை தியாகராய நகரில் தவெக தலைவர் விஜய் நாளை(ஏப். 15) மேற்கொள்ள பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் காரைக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
Advertisement
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே ஏப். 9 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், நேரக்கட்டுப்பாடு காரணமாக பேசாமல் சென்றுவிட்டார்.
ஏற்கெனவே வில்லிவாக்கம், அண்ணா நகர் தொகுதிகளில் போதிய பாதுகாப்பின்மை காரணமாக விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்திற்கு 1 மணி நேரம் மட்டுமே காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதால் சைதாப்பேட்டை பிரசாரத்தை தவெக முன்னதாக ரத்து செய்தது.
இந்த நிலையில், சென்னை தியாகராய நகர், சைதாப்பேட்டையில் தவெக தலைவர் விஜய் நாளை பிரசாரம் செய்வதற்கான அனுமதியை காவல் துறை, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களிலும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து, விஜய் நாளை பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.