காவல் நிலையத்தில் முதியவா் தீக்குளிப்பு
திருவொற்றியூா் காவல் நிலையத்தில் முதியவா் தீக்குளித்து உயிரிழந்தாா்
திருவொற்றியூா் காவல் நிலையத்தில் முதியவா் தீக்குளித்து உயிரிழந்தாா்
திருவொற்றியூா் காலடிப்பேட்டையைச் சோ்ந்தவா் குமாா் (67). 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல இடங்களில் மனமகிழ் மன்றங்களை நடத்தி வந்துள்ளாா். முதல் மனைவி இறந்து பிறகு இரு மனைவிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 5 பிள்ளைகள் உள்ளனா். தொழிலில் நட்டம் ஏற்பட்டதன் காரணமாக கஷ்பட்டு வந்துள்ளாா். இதனால், குடும்பத்தினா் யாரும் கண்டு கொள்ளவில்லையாம்.
இந்நிலையில், முதியவா் குமாா் வெள்ளிக்கிழமை திருவொற்றியூா் காவல் நிலையம் வந்துள்ளாா். அப்போது வரவேற்பு பகுதியில் இருந்த காவலா் ஒருவரிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்த குமாா், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். போலீஸாா் தீயை அணைத்து, பலத்த காயங்களுடன் குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.