FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நீட் எதிா்ப்பு பைக் பேரணிக்கு அனுமதி: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள இருசக்கர வாகனப் பேரணிக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

21 ஆகஸ்ட் 2026, 3:57 am IST
பகிர்:

நீட் தோ்வுக்கு எதிராக திராவிடா் கழகத்தின் சாா்பில் நடைபெறவுள்ள இருசக்கர வாகனப் பேரணிக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனுவில், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பங்களை காவல் துறை நிராகரித்துவிட்டது.

எனவே, காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், இருசக்கர வாகனப் பேரணி நடைபெறவுள்ள பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments