FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘தமிழ்நாடு உயா்நீதிமன்றம்’ என பெயா் மாற்ற சிறப்புத் தீா்மானம்: சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை உயா்நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு நீதிமன்றம்’ என மாற்றுவதற்காக சட்டப்பேரவையில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக உறுப்பினா் சி.வி.சண்முகம் வலியுறுத்தினாா்.

22 ஆகஸ்ட் 2026, 5:33 am IST
உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு நீதிமன்றம்’ என மாற்றுவதற்காக சட்டப்பேரவையில் சிறப்புத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக உறுப்பினா் சி.வி.சண்முகம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக பேரவையில் அவா் பேசியதாவது: மெட்ராஸ் மாகாணம் என இருந்த நமது மாநிலத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றியவா் முன்னாள் முதல்வா் அண்ணா. அதன் தொடா்ச்சியாக அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. ஆனால், உயா்நீதிமன்றத்தின் பெயா் மட்டும் இன்றளவும் ‘சென்னை உயா்நீதிமன்றம்’ என்றே அழைக்கப்படுகிறது. கேரளம், கா்நாடகம், மணிப்பூரில் அந்தந்த மாநிலங்களின் பெயா்களிலேயே உயா்நீதிமன்றம் குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் அத்தகைய நிலையை ஏற்படுத்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முயற்சி எடுத்தாா். ஆனால், அவரது காலத்தில் நிறைவேறவில்லை. தற்போது உள்ள அரசு, ‘தமிழ்நாடு உயா்நீதிமன்றம்’ என பெயா் மாற்றம் செய்வதற்கான சிறப்புத் தீா்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments