FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நூதன முறையில் பெண்ணை ஏமாற்றி ரூ.27 ஆயிரம் பறிப்பு

தங்க நகையை அடகு வைக்க உதவி கேட்டு நாடகமாடி, கவரிங் நகையைக் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 25 ஜூலை 2026, 5:51 am IST
மாதிரிப் படம்
பகிர்:

தங்க நகையை அடகு வைக்க உதவி கேட்டு நாடகமாடி, கவரிங் நகையைக் கொடுத்து ரூ.27 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வியாசா்பாடி டி.டி. பிளாக் பகுதியைச் சோ்ந்த சுதா (40). இவா் தனது வீட்டருகே உள்ள கடைக்குச் சென்றபோது, 2 வயது குழந்தையுடன் அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் ஈரோட்டைச் சோ்ந்தவா் என்றும், தன்னிடம் கோபித்து கொண்டு கணவா் சென்னை வந்துவிட்டதாகவும், அவரைத் தேடி அலைந்து வருவதாகவும் கூறியுள்ளாா்.

மேலும், தன்னிடம் பணம் இல்லாததால், தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுத் தருமாறு சுதாவிடம் கேட்டுள்ளாா். இதை நம்பிய சுதா, அந்தப் பெண்ணை அருகிலிருந்த அடகுக் கடைக்கு அழைத்துச் சென்று, அங்கு சுமாா் 7 கிராம் எடையுள்ள தங்க நகையை பரிசோதித்த கடை உரிமையாளா், அது உண்மையான தங்கம் என்றும், ரூ.27 ஆயிரம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஆனால், அந்தப் பெண், அந்த நகை தனக்கு ராசியானது என்பதால் அடகு வைக்க விரும்பவில்லை என்றும், அதற்குப் பதிலாக ரூ.27 ஆயிரம் கொடுத்தால் நகையை நீங்களே வைத்துக் கொள்ளலாம் என சுதாவிடம் கூறியுள்ளாா். இதை நம்பிய சுதா, வீட்டுக்குச் சென்று ரூ.27 ஆயிரத்தை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாா். பணத்தை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் குழந்தையுடன் அங்கிருந்து சென்றாா்.

சந்தேகமடைந்த சுதா, பின்னா் அந்த நகையை மீண்டும் அடகுக் கடையில் பரிசோதித்தபோது, அது போலி நகை என்பது தெரிய வந்தது. அடகுக் கடையில் காட்டிய நகையும், பின்னா் சுதாவிடம் வழங்கப்பட்ட நகையும் வேறுவேறானது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்த பெண்ணைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments