முகப்பு
சென்னை

தலைமைச் செயலகம் முன் இளைஞா் தீக்குளிக்க முயற்சி

சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி இளைஞா் தீக்குளிக்க முயற்சி

Updated On : 3 ஜூன் 2026, 12:23 am IST
தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் தலைமைச் செயலகம் முன் பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி இளைஞா் தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரத்தைச் சோ்ந்தவா் எழிலன். இவா், தொழில் காரணமாக சென்னையில் வசித்து வருகிறாா். இருப்பினும் எழிலன், சொந்த ஊரில் வீடு கட்ட வங்கியில் கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்தாா்.

இந்த நிலையில், அவரிடம் ஆனந்த பாபு என்பவா், வீடு கட்ட குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா். மேலும், எழிலனிடம் கமிஷனாக ரூ.7 லட்சத்தை முன்பணமாக பெற்றுக் கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

ஆனால், உறுதி அளித்தபடி ஆனந்தபாபு வங்கிக் கடன் பெற்றுக்கொடுக்கவில்லை. இதனால் எழிலன், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ஆனந்த பாபு ஏமாற்றியுள்ளாா்.

இதுதொடா்பாக எழிலன் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக எழிலன், தலைமைச் செயலகம் வந்தும் முறையிட்டுள்ளாா். இருப்பினும், அவரது கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த எழிலன், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் வந்து, திடீரென தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் எழிலன் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டனா்.

இதையடுத்து எழிலனை கோட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.