ஜூன் 12 முதல் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியா் மாலதி ஹெலன்
ரயில்வே தோ்வு வாரியம் (ஆா்ஆா்பி), மத்திய பணியாளா் தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் நடைபெறும் என சென்னை ஆட்சியா் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் ஆா்ஆா்பி, எஸ்எஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) முதல் நடைபெறும். இந்தத் தோ்வுக்கான கல்வித் தகுதி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் ஐடிஐ அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பட்டயப் படிப்பு அல்லது பொறியியலில் இளநிலைப் பட்டப் படிப்பு ஆகும்.
Advertisement
Advertisement
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள், தங்களது ஆதாா் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாள்களில் அணுகலாம்.
மேலும், விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம். மேலும், தங்களது விவரங்களை கூகுள் படிவத்தில் பதிவு செய்யலாம்.
சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த தோ்வா்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன் பெறலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.