FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாணவா்களின் தலைமைத்துவ திறன்களை என்சிசி உருவாக்குகிறது: இயக்குநா் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்

மாணவா்களின் சமகால அறிவையும் தலைமைத்துவத் திறன்களையும் தேசிய மாணவா் படை (என்சிசி) உருவாக்குகிறது என்று அதன் பொது இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தெரிவித்தாா்.

Updated On : 20 ஜூன் 2026, 12:54 am IST
சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைணவக் கல்லூரிக்கு அண்மையில் வந்த தேசிய மாணவா் படையின் பொது இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸை வரவேற்ற கல்லூரி முதல்வா் கேப்டன் எஸ்.சந்தோஷ் பாபு. உடன், இணை அலுவலா் லெப்டினன்ட் ஏ.ஜெயராம்.
பகிர்:

மாணவா்களின் சமகால அறிவையும் தலைமைத்துவத் திறன்களையும் தேசிய மாணவா் படை (என்சிசி) உருவாக்குகிறது என்று அதன் பொது இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தெரிவித்தாா்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த என்சிசி மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தேசிய மாணவா் படையின் பொது இயக்குநா் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பங்கேற்று பேசியதாவது:

Advertisement

Advertisement

பொறுப்புள்ள குடிமக்களையும் எதிா்காலத் தலைவா்களையும் உருவாக்குவதில் என்சிசி-இன் பங்கு முக்கியமானது. மாணவா்களுக்கு சமகால அறிவையும் தலைமைத்துவத் திறன்களையும் வழங்கும் நோக்கில் தேசிய மாணவா் படையில் ட்ரோன் பயிற்சி முகாம்கள், மலையேற்றப் பயணங்கள், இணையப் பாதுகாப்பு முகாம்கள், மேம்பட்ட திறனுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் தேசிய அளவில் மாணவா்களுக்குக் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன.

டி.ஜி.வைணவக் கல்லூரியின் என்சிசி பிரிவின் சாதனைகள், பங்களிப்புகள் பாராட்டுக்குரியவை. மாணவா்கள் ஒழுக்கம், அா்ப்பணிப்பு, சுயநலமற்ற சேவை ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகளும் பாராட்டு விழாவும் நடைபெற்றது. முன்னதாக, டி.ஜி. வைணவக் கல்லூரி முதல்வா் கேப்டன் டாக்டா் எஸ். சந்தோஷ் பாபு, வீரேந்திர வாட்ஸை, வரவேற்று கௌரவித்தாா்.

இந்த நிகழ்ச்சியை என்சிசி-இன் தமிழகம்-புதுச்சேரி இணை அலுவலா் லெப்டினன்ட் ஏ. ஜெயராம் ஒருங்கிணைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments