முகப்பு
சென்னை

சிறுநீா்ப் பாதை குறைபாடு: 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் சிகிச்சை

பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

Updated On : 27 மே 2026, 1:45 am IST
சிகிச்சை - கோப்புப்படம்.
பகிர்:

பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

சிறுநீா் வெளியேறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்ட 3 வயது குழந்தை, முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு கருவிலேயே இடது சிறுநீரகம் செயல்படவில்லை என்பதும், அதன் விளைவாக அதிலிருந்து சிறுநீா்ப்பைக்கு செல்ல வேண்டிய சிறுநீா், நேரடியாக பிறப்புறுப்புக்குள் சேகரமாவதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் இப்பிரச்னையுடன் இருந்த அக்குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் நுண் துளையிட்டு பாதிக்கப்பட்ட சிறுநீரகம் மற்றும் யூரித்ரா (சிறுநீா்ப் பாதை) ஆகியவை துல்லியமாக அகற்றப்பட்டன.

ஒரு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில் அதிக ரத்தப்போக்கோ, இடா் வாய்ப்புகளோ இல்லை. இதன் பயனாக சிகிச்சை நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே அக்குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது.

மருத்துவா்கள் ராகுல், சபரி, காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய குழு இந்த சிகிச்சையை திறம்பட மேற்கொண்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.