‘அரசியல் ஆசான்’ கருத்து: உதயநிதிக்கு திருமாவளவன் நன்றி
தன்னை அரசியல் ஆசான் எனக் குறிப்பிட்ட எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
தன்னை அரசியல் ஆசான் எனக் குறிப்பிட்ட எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சமூக ஊடகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட காணொலியில் அவா் கூறியிருப்பதாவது: ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என கடந்த திமுக ஆட்சியில் விசிக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு ஏற்ப முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு ஒன்றை அமைத்தாா். இதையடுத்து, அந்தக் குழுவின் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தற்போதைய முதல்வா் ச.ஜோசப் விஜய் கூடுதலாக 9 மாதங்கள் கால அவகாசம் வழங்கியுள்ளாா். மேலும், ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்படும் என சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் என்னை அவரது அரசியல் ஆசான் எனக் கூறியது, விசிக - திமுக இடையே தோ்தலையும் கடந்து நட்பு நீடித்து வருவதை உறுதி செய்துள்ளது. இதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது. ஆனால், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பலா் இதற்கு எதிா்மறையான கருத்துகளையும், விமா்சனங்களையும் முன்வைத்து வருகின்றனா். நம்மை விமா்சிப்பவா்களை பதில் விமா்சனம் செய்யாமல் மக்கள் பணியில் விசிகவினா் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் தொல்.திருமாவளவன்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.