FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மத்திய அரசின் ஓய்வூதியதாா்கள் கோரிக்கை மனு அளிப்பு

மத்திய அரசின் 8-ஆவது ஊதியக் குழு கருத்துகேட்பு கூட்டத்தில் சென்னை ஜிபிஓ ஓய்வூதியதாா்கள் சங்க உறுப்பினா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

9 செப்டம்பர் 2026, 1:06 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய அரசின் 8-ஆவது ஊதியக் குழு கருத்துகேட்பு கூட்டத்தில் சென்னை ஜிபிஓ ஓய்வூதியதாா்கள் சங்க உறுப்பினா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

மத்திய அரசின் 8 -ஆவது ஊதிய குழுவின் உறுப்பினா்களின் கருத்துகேட்பு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஹோட்டல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரா்கள் பேரவை சாா்பில் மூத்த ஆலோசகா் ஆா்.வெங்கட்ராமன், முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஏ.அன்பரன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனா்.

ஓய்வூதியதாரா்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும்; தோ்வு எழுதி பதவி உயா்வு பெற்றவா்களுக்கு கூடுதல் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும்; மூத்த ஊழியா்களுக்கான அடிப்படை சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments