FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போதை மாத்திரை விற்பனை: இளம்பெண் கைது

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் போதை மாத்திரை விற்றதாக இளம் பெண் கைது செய்யப்பட்டாா்.

43 வினாடிகள் முன்பு
பகிர்:

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் போதை மாத்திரை விற்றதாக இளம் பெண் கைது செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம் எழில் நகா் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக பள்ளிக்கரணை மதுவிலக்க அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனா். மேலும் அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, 200 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பெண்ணை கைது செய்து, விசாரித்தில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த இவாஞ்சலின் (20) என்பது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments