இப்தார் சமத்துவ நோன்பு திறப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், இப்தார் சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், இப்தார் சமத்துவ நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை அச்சிறுப்பாக்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் காசிம் தலைமை வகித்தார். புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர் கோ.ப.அன்பழகன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்டத் தலைவர், ஷேக் தாவூத், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஷாஜகான், திமுக ஒன்றியச் செயலர் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ஆதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.